கோவை நவ: 11
பொள்ளாச்சி ஈமச்சடங்கு அறக்கட்டளை சார்பில் ஒரு மனிதர் ஒரு ரூபாய் என்ற ஒரு புதிய திட்டத்தை
அறிமுகப்படுத்தினார். அறக்கட்டளை
யின் ஒருங்கிணைப்பாளர்
பரமேஸ்வரன் செய்தியாளர்களிடம்
கூறியதாவது:
மனிதனாக பிறந்தவர் ஒருநாள் இரக்க நேரிடும் அந்த சமயத்தில் அனைவரும் இறுதியாக ஈமச்சடங்கு செய்வது இயல்பான ஒன்று அப்படிப்பட்ட
ஈம சடங்கிற்கு கூட பொருளை ஈட்ட இயலாத குடும்பங்களுக்கு இறுதியில் செய்யக்கூடிய ஈமச்சடங்கினை எங்களுடைய அறக்கட்டளையின் சார்பில் செய்து வருகிறோம்.
அந்த வகையில் எங்களுடைய அறக்கட்டளையின் நிர்வாகிகளின் ஆலோசனைப்படி ஒரு மனிதருக்கு ஒரு ரூபாய் நன்கொடையாக வழங்க வேண்டுகிறோம்.
இந்த தொகை பல்வேறு ஆத்மாக்களை நல்லடக்கம் செய்வதற்கான ஒரு பெரும் பங்கு வகிக்கும் எனவும் இந்த தொகையின் மூலம் கிடைக்கின்ற பொருளாதரத்தை ஆம்புலன்ஸ்,ப்ரீசர் பாக்ஸ் மற்றும் ஈமச்சடங்கிற்கு பயன்படுத்துவோம் செய்தியாளர்களிடம் கூறினார்.

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!