வந்தவாசி, நவ 19:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகம் எதிரே ஜாக்டோ ஜியோ அரசு ஊழியர்கள் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் சபரிராஜ், க.வாசு, செந்தில்குமார், ராஜேஷ், இப்ராகிம், ரகுபாரதி, ஆசிரியைகள் சாந்தி, மணிமேகலை மற்றும் மேனாள் சங்க மாநில பொறுப்பாளர் கேப்டன் பிரபாகரன் உள்ளிட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!