April 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் செஞ்சியில் புனித ரமலான் சமூக நல்லிணக்க இஃப்தார்நோன்பு திறக்கும் நிகழ்ச்சி -விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ பங்கேற்பு….

விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் புனித ரமலான் சமூகநல்லிணக்க இஃத்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி செஞ்சி திருவண்ணாமலை சாலையில் உள்ள வள்ளி அண்ணாமலை திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு செஞ்சி வட்டார ஜமாத் தலைவர் சையத்அப்துல் மஜித் பாபுதலைமை தாங்கினார்.பாலகணேஷ் ஐயர்,திருமுருகன் அடிகளார்,கன்மலை கிருத்துவ ஆலயத்தின் அருள்தந்தைஜான் சக்தி கிருபை நாதன்,செஞ்சி ஒன்றிய பெருந்தலைவர் விஜயகுமார் ,தலைமை செயற்குழு உறுப்பினர் மேல்மலையனூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் ஆகியோர்முன்னிலை வகித்தனர்.செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் அலிமஸ்தான் அனைவரையும் வரவேற்றார்.

விழாவில் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர்,முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்.எல்.ஏ கலந்து கொண்டு புனித ரமலான் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.

நிகழ்ச்சியில்
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் டாக்டர் மாசிலாமணி, செந்தமிழ் செல்வன், மாநில தீர்மானக் குழு உறுப்பினர் செஞ்சி சிவா ,ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை, மொடையூர் துரை, பச்சையப்பன்,பொதுக்குழு உறுப்பினர் மணிவண்ணன்
மாவட்ட கவுன்சிலர்கள் அரங்க ஏழுமலை, அகிலா பார்த்தீபன், செல்வி ராமசரவணன், அன்புசெழியன், ,
பேரூர் செயலாளர் கார்த்திக்,
விழுப்புரம் வடக்கு மாவட்டகாங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்க பூபதி, கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி மாதவன்,தேமுதிக மாவட்ட பொருளாளர் தயாநிதி, விசிக ராஜாராமன்,
மனிதநேய மக்கள் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் சையத் உஸ்மான், வர்தகர் சங்கத் தலைவர் செல்வராஜ், ,பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் ராஜலட்சுமி செயல்மணி, மாவட்ட அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள்,,திமுக நிர்வாகிகள்,அனைத்து தோழமைக் கட்சி நிர்வாகிகள்கலந்து கொண்டனர். முகமது அஷ்ரப் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.நகர விவசாய அணி அமைப்பாளர் ஜான்பாஷா நன்றி கூறினார்.

Facebook
YouTube
Instagram
WhatsApp