பள்ளிக் கல்வித்துறை கீழ் விழுப்புரம் கல்வி மாவட்டத்தில் அனைத்து வகைப்
பள்ளிகளில் செயல்பட்டுவரும் ஜூனியர் ரெட் கிராஸ் அமைப்பின் மாவட்ட செயற்குழு கூட்டம். விழுப்புரம் டி.இ.எல்.சி நடுநிலைப் பள்ளியில்
மாவட்டக் கல்வி அலுவலர் எஸ்.பி சேகர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட பொருளாளர் எஸ். எட்வர்ட் தங்கராஜ் வரவேற்றார். மாவட்டக் கன்வீனர் முனைவர். ம.பாபு செல்வதுரை அவர்கள் அமைப்பு சார்ந்த தீர்மானங்களை கலந்தாய்வுக்காக சமர்ப்பித்தார். அதில் கடந்த ஆண்டின் அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும் நடப்பு ஆண்டில் நடைபெறவுள்ள ஜே.ஆர்.சி. மாணவர்கள் முகாம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரெ. அறிவழகன் அவர்கள். தலைமையில் சிறப்பாக நடத்திடவும் , மாணவர்களின் நலன் கருதி வானூர், கண்டமங்கலம், கோலியனூர், விக்கிரவாண்டி, காணை , விழுப்புரம், திருவெண்ணெய்நல்லூர் ஆகிய ஒன்றியங்களை நான்கு மையங்களாக ஒருங்கிணைத்து நடத்துவது எனவும் முடிவு செய்தனர்.
மேலும் அன்று பிற்பகல் நடைபெறவுள்ள மாநில அளவிலான தேர்விற்கு மாணவர்களை ஆயத்தப்படுத்துவது எனவும், தமிழ்நாடு அளவில் விழுப்புரம் ஜே.ஆர்.சி அமைப்பை
முதன்மையாக கொண்டு வந்து விழுப்புரம் மாவட்டத்திற்கு
பெருமை சேர்க்கும் விதத்தில் இணைந்து
புதிய உத்வேகத்துடன் செயல்பட ஒப்புதல் அளித்தனர். அதனை தொடர்ந்து அட்வான்ஸ் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டினை முன்னிட்டு இனிப்புகளை வழங்கி வாழ்த்தினர். இதில் அனைத்து நிலை வட்டார, மாவட்ட , அளவிலான நிர்வாகிகள் பங்கேற்றனர்.இறுதியில் மாவட்ட இணைக் கன்வீனர். S.ரவீந்திரன் நன்றி கூறினார்.
விழுப்புரம் ஜூனியர் ரெட் கிராஸ் செயற்குழு கூட்டம்

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!