April 5, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

போச்சம்பள்ளி அருகே டைல்ஸ் மார்பிள் சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மகாதேவ கொல்லஹள்ளி ஊராட்சி சமுதாயக்கூடத்தில் டைல்ஸ் மற்றும் மார்பில் சங்கம் சார்பில் நல திட்ட உதவிகள் மற்றும் புதிய நல வாரிய அட்டை வழங்கும் விழா சேலம் மண்டல துணைத் தலைவர் சபரீசன், பா.ம.க மாவட்ட செயலாளரும் வெங்கடேஸ்வரா டைல்ஸ் உரிமையாளருமான பழனிவேல் ஆகியோர்
தலைமையில்
நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக தமிழக வாழ்வுரிமை கட்சி
நெப்போலியன், கார்த்திக் சீனிவாசன், அய்யப்பன், நாம் தமிழர் கட்சி கவின் குமார், செந்தமிழ் சேரன், சரத்குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி நல திட்ட உதவிகள் மற்றும் புதிய நலவாரிய அட்டைகளை சங்க உறுப்பினர்களுக்கு வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில்
சிவம் சூப்பர் டைல்ஸ் உரிமையாளர் மாதேஷ், எஸ்.எல்.பி டைல்ஸ் நந்தகுமார், அம்மன் டைல்ஸ் உரிமையாளர் சக்தி, சங்க துணை தலைவர் மகாதேவன், செயலாளர் சீனிவாசன், ஒருங்கிணைப்பாளர்கள் சுரேஷ் பாபு, பிரபு, தமிழரசன், சக்தி, காப்பாளர் மாதேஸ்வரன்
உள்ளிட்ட
ஏராளமான டைல்ஸ் மற்றும் மார்பில் தொழில் செய்யும் தொழிலாளர்கள் ஒன்றினைந்து நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை
செய்திருந்தனர்.

Facebook
YouTube
Instagram
WhatsApp