புதுச்சேரி:
புதுச்சேரி மாநிலத்தில் மாணவர்களின் ஒழுக்கம், கலை மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்தும் நோக்கில், புதிய ‘குருகுலம்’ ஒன்று விரைவில் தொடங்கப்பட உள்ளது. திருப்பத்தூர் பாரத் குரூப் ஆஃப் இன்ஸ்டியூஷன் (Bharat Group of Institutions) சார்பில் அமையவுள்ள இந்த குருகுலத்திற்கான முன்னெடுப்புகள் தீவிரமடைந்துள்ளன.
இதன் முக்கிய நிகழ்வாக, திருப்பத்தூர் பாரத் குரூப் ஆஃப் இன்ஸ்டியூஷன் மற்றும் குருகுலத்தின் தலைமை ஆசான் கராத்தே கதிரவன் அவர்கள், புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள முதலமைச்சர் அலுவலகத்தில், மாண்புமிகு புதுச்சேரி முதலமைச்சர் அவர்களை நேரில் சந்தித்தார்.
இந்தச் சந்திப்பின் போது, புதுச்சேரியில் தொடங்கப்படவுள்ள குருகுலத்தின் நோக்கங்கள், அங்கு பயிற்றுவிக்கப்படவுள்ள கல்வி, கலைகள் மற்றும் வழிமுறைகள் குறித்து முதலமைச்சரிடம் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. இம்முயற்சியைத் தொடங்குவதற்கு முதலமைச்சரின் ஆசீர்வாதத்தையும், குருகுலத்தை வெற்றிகரமாக வழிநடத்துவதற்கான முக்கிய அறிவுறுத்தல்களையும் தலைமை ஆசான் கராத்தே கதிரவன் பெற்றுக்கொண்டார்.
கலை, இலக்கியம் மற்றும் விளையாட்டுத் துறையைச் சேர்ந்த பல முக்கிய ஆளுமைகள் தலைமை ஆசான் கராத்தே கதிரவன் அவர்களுடன்
அக்னி ஆதவன் (திரைப்பட இயக்குனர்)
மணி சாமி (நீதிக்கதிர் பத்திரிகை நிருபர்)
ஜிம் T.M மோகன் (சிலம்பம் மாஸ்டர்)
புருஷோத்தமன் (சிலம்பம் மாஸ்டர்)
ஜான் போஸ்கோ (மியூசிக் மாஸ்டர்)
காயத்ரி (கராத்தே மாஸ்டர்)
மகாலட்சுமி (கராத்தே மாஸ்டர்) ஆகியோர் உடன் இருந்தனர், மேலும்
புதுச்சேரி மண்ணில் அமையவுள்ள இந்த குருகுலம், வருங்கால சந்ததியினருக்குத் தற்காப்பு கலைகள் மற்றும் வாழ்வியல் நெறிகளைக் கற்றுத்தரும் ஒரு கலங்கரை விளக்கமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!