திறப்பு விழாவை முன்னிட்டு 2 நாட்களுக்கு 50% அதிரடி தள்ளுபடி அறிவிப்பு!
புதுச்சேரி இந்திரா காந்தி சிலை அருகே உள்ள நடேசன் நகரில், அனைத்து ரக வாகனங்களுக்குமான அதிநவீன “அண்ணா கார் வாஷ்” (Anna Car Wash) நிலையத்தின் திறப்பு விழா இன்று (பிப்ரவரி 6) மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந்த புதிய நிலையத்தை புதுச்சேரி மாண்புமிகு முதலமைச்சர் N. ரங்கசாமி அவர்கள் நேரில் வருகை தந்து, ரிப்பன் வெட்டி முறைப்படி திறந்து வைத்தார். இவ்விழாவிற்கு பாஜக மாநில துணைத் தலைவர் சரவணன் அவர்கள் முன்னிலை வகித்துச் சிறப்பித்தார்.
விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சங்கர் அவர்கள் மிகச் சிறப்பாகச் செய்திருந்தார். விழாவின் நிறைவாக, நிலையத்தின் உரிமையாளர் (Proprietor) அருண் அவர்கள், வருகை தந்திருந்த சிறப்பு விருந்தினர்களுக்கும், பொதுமக்களுக்கும் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.
மெகா சலுகை – 50% தள்ளுபடி!
கடையின் திறப்பு விழாவைக் கொண்டாடும் வகையில், வாடிக்கையாளர்களுக்கு ஒரு அதிரடி சலுகையை நிர்வாகம் அறிவித்துள்ளது.
நாளை மற்றும் மறுநாள் (பிப்ரவரி 7 & 8) ஆகிய இரண்டு நாட்களுக்கு மட்டும், கார் மற்றும் பைக் வாஷ் சேவைகளுக்கு 50% கட்டணச் சலுகை வழங்கப்படும்.
சாதாரண வாஷ் முதல் டீப் வாஷ், ஃபோம் வாஷ், அண்டர்சேஸிஸ் வாஷ் மற்றும் வேக்ஸ் கோட்டிங் என அனைத்து சேவைகளுக்கும் இந்த பாதி விலை சலுகை பொருந்தும்.
புதுச்சேரியின் முக்கியப் பகுதியான 100 அடி சாலையில் தொடங்கப்பட்டுள்ள இந்த நிலையத்தில், நவீன இயந்திரங்கள் மூலம் மிகக் குறைந்த நேரத்தில் தரம் வாய்ந்த சேவை வழங்கப்படுவது வாகன உரிமையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!