கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூரில் உள்ள தமிழக வாழ்வுரிமை கட்சியின் அலுவலகத்தில், கிருஷ்ணகிரி மாவட்ட மண்டலச் செயலாளர் நெப்போலியன் அவர்களின் பிறந்தநாள் விழா அக்கட்சியினரால் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வையொட்டி, கட்சி அலுவலகத்திற்கு வருகை தந்த மண்டலச் செயலாளர் நெப்போலியன் அவர்களுக்கு, மத்தூர் ஒன்றிய மற்றும் நகரப் பொறுப்பாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். விழாவின் முக்கிய நிகழ்வாக, நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் புடைசூழ பிரம்மாண்டமான பிறந்தநாள் கேக்கை நெப்போலியன் அவர்கள் வெட்டினார். அப்போது அங்கு கூடியிருந்த தொண்டர்கள் கரகோஷம் எழுப்பி தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
தொடர்ந்து, அவருக்கு 100 ரூபாய் நோட்டுகளால் கோர்க்கப்பட்ட ₹10,000 மதிப்பிலான பிரம்மாண்ட பணமாலையை மத்தூர் பகுதி நிர்வாகிகள் அணிவித்து, மலர் மாலைகள் மற்றும் பொன்னாடைகள் போர்த்தி கௌரவித்தனர்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, கட்சி அலுவலகத்தின் முன்பு திரண்ட தொண்டர்கள் வானவேடிக்கை மற்றும் பட்டாசுகள் வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பொதுமக்களுக்கு இனிப்புகளையும், வழங்கி பிறந்தநாள் கொண்டாட்டத்தை உற்சாகமாகக் கொண்டாடினர்.
இந்த விழாவில் மாவட்ட, ஒன்றிய, கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் ஏராளமான கட்சித் தொண்டர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கட்சி அலுவலகமே விழாக்கோலம் பூண்டிருந்தது குறிப்பிடத்தக்கது
பிறந்தநாள் விழா

More Stories
வந்தவாசியில் 700 நாட்களை கடந்த பகிர்ந்துண் இலவச உணவகம்…!
சேலம்,06/04/2026.
Election