(பதிவு எண்: 6/2024)
அனைத்து வாகன ஓட்டுநர்கள் பாதுகாப்பு சங்கம்
(SRG 92/2024)
தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ஓட்டுநர் சுரேஷ் அவர்கள்
புறவடை கிராமம்,
அதியமான் கோட்டை அஞ்சல்,
நல்லம்பள்ளி வட்டம்,
தருமபுரி மாவட்டம்.
சுரேஷ் அவர்கள் ஆந்திர மாநிலத்தில் ஏற்பட்ட விபத்தினால் உடல்நிலை பாதிக்கப்பட்டு தற்போது வீட்டில் சிகிச்சை பெற்று வருகிறார். வேலைக்கு செல்ல முடியாத சூழ்நிலையில் உள்ளார்.
அவருடைய மருத்துவ செலவிற்காக சங்கத்தின் அனைத்து மாவட்ட ஓட்டுநர்களின் ஒத்துழைப்புடன் 26/02/2026 அன்று ரூ.35,000 (முப்பத்தைந்து ஆயிரம் ரூபாய்) ரொக்கமாக வழங்கப்பட்டது.
இந்த நிதியை தருமபுரி மாவட்ட தலைவர் திரு R.ஆறுமுகம்,
மாவட்ட பொருளாளர் G.சக்திவேல்,
இணைத் தலைவர் L.குமார்,
G.சங்கர் (மாவட்ட ஒருங்கிணைப்பாளர்),
G.வஜ்ஜிரவேல் (மாவட்ட துணை தலைவர்),
முத்துராமன் (மாவட்ட மேற்பார்வையாளர்),
சிவநாதன் (நல்லம்பள்ளி ஒன்றிய செயலாளர்)
மற்றும் நல்லம்பள்ளி ஒன்றிய உறுப்பினர்கள்
S.முருகன்,
S.கணபதி,
P.ஆறுமுகம் (பென்னகரம் ஒன்றிய உறுப்பினர்) ஆகியோர் நேரில் சென்று சுரேஷ் அவர்களின் உடல் நலனை விசாரித்து, வசூலிக்கப்பட்ட முழுத் தொகையான ரூ.35,000-ஐ அவரிடம் ஒப்படைத்தனர்.
இந்த உதவிக்கு துணைநின்ற மாநில நிர்வாகிகள்.அனைத்து மாவட்ட . ஒன்றிய நிர்வாகிகள். உறுப்பினர்கள் அனைவருக்கும் தருமபுரி மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் அனைத்து உறுப்பினர்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகள் தெரிவித்துக்கொள்கிறோம் -தர்மபுரி மாவட்ட நிர்வாகம்.
மாவட்ட செய்தியாளர் கவியரசு
9900557307

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!