நலத்திட்ட உதவிகளுடன் கோலாகல கொண்டாட்டம்
துவரங்குறிச்சி ஜுன் 23:
திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி பேரூர் கழகம் மற்றும் மாவட்ட இளைஞரணி சார்பில், தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாள் விழா சமூக நலப் பணிகளுடன் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
இந்த விழாவிற்கு பொன்னம்பட்டி பேரூர் கழகச் செயலாளர் பொன். சங்கர பாண்டியன் மற்றும் மாவட்ட இளைஞரணி நிர்வாகி அப்துல் சுபான் ஆகியோர் தலைமையேற்று சிறப்பாக நடத்தினர்.
முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் பொதுமக்களுக்கு ஏராளமான மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டன.

மேலும், துவரங்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நட்டு பசுமை வளர்ச்சிக்கான உறுதிமொழியும் எடுக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கல்வியை ஊக்குவிக்கும் நோக்கில் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், பேனா, பென்சில் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வு மாணவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
மேலும், சமூகத்தின் அடித்தட்டு மக்களுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்களுக்கு வேட்டி, சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டதுடன், அன்னதானமும் நடைபெற்றது.
இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
சமூக அக்கறை மற்றும் மக்கள் நலன் சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் நடைபெற்ற இந்த பிறந்தநாள் விழா, அரசியல் விழாவாக மட்டுமல்லாமல் சேவை மனப்பான்மையை வெளிப்படுத்தும் வகையில் அமைந்ததாக பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
விழாவில் பேரூர் கழக நிர்வாகிகள், இளைஞரணி உறுப்பினர்கள், பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் திரளாக கலந்து கொண்டு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

More Stories
புதுச்சேரி அரியாங்குப்பம் தொகுதியில் மனையிடப்பட்டா வழங்குவதில் வெளிப்படையான ஆய்வு மேற்கொள்ள வேண்டும் – வன்னியர் முன்னேற்ற இயக்க தலைவர் லிங்கசாமி கோரிக்கை!
புதுச்சேரி: திரைக்கலையில் தேசிய விருதுகள் பெற்ற இயக்குனர் இமயம் பாரதிராஜாவுக்கு, மலர் வணக்க நிகழ்ச்சி நடைபெற்றது