திருச்சி டிச – 27:
திருச்சி மாவட்டம் , வளநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலை, சொறியம்பட்டி விளக்கு அருகே திருச்சியிலிருந்து – மதுரை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்ற மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் முகமதியாபுரத்தை சேர்ந்த மீரா மைதீன் மகன் காதர் மைதீன் (23), மேலூரில் கறிக்கடையில் வேலை பார்த்து வந்ததாகவும், மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், வ. உ . சி .நகரைச் சேர்ந்த காதர் மகன் அப்சர் (20) , ஆகியோர் இருசக்கர வாகனத்தில் சென்ற போது நிலை தடுமாறி முன்னே சென்ற வாகனத்தின் மோதியதில் கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலே உயிரிழந்தனர்.
மேலும் தகவல் அறிந்து வந்த வளநாடு போலீசார் இருவரின் உடலை மீட்டு வழக்கு பதிந்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!