April 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

காரமடை அருகே கிறிஸ்து அரசர் பொறியியல் கல்லூரியில் இரத்ததான முகாம்

கோவை மார்ச்:13

கோவை மாவட்டம் காரமடை அருகே சிக்காரம்பாளையம் ஊராட்சியில் உள்ள கிறிஸ்து அரசர் பொறியியல் கல்லூரியில் காரமடை ரோட்டரி சங்கம்,திருப்பூர் ஐ.எம்.ஏ.பிளட் பேங்க்,கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம்,இண்ட்ராக்ட் கிளப் ஆகியவை இணைந்து இரத்ததானம் வழங்கும் முகாமை நடத்தினார்கள்.இம்முகாம் ரோட்டரி சங்கத் தலைவர் குமணன் நடராஜன் தலைமையில் நடைபெற்றது.

இந்த சிறப்பு முகாமில் கல்லூரியில் பயிலும் பல்வேறு துறைகளைச் சார்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தார்கள்.அம்மாணவர்களை ரோட்டரி சங்க தலைவரும்,கல்லூரி முதல்வரும் சான்றிதழ்கள் வழங்கி வாழ்த்தி பேசினார்கள்.அதில்”ரத்த தானம் செய்வதால் இதன் மூலம் பிற உயிர்கள் அடையும் பயன்களையும்,இரத்தம் வழங்குவோருக்கு உடலில் ஏற்படும் நன்மைகள் குறித்தும் விளக்கி பேசினார்கள்.

இந்நிகழ்ச்சியில் உடன் ரோட்டரி சங்க நிர்வாகிகள் மண்டல ஒருங்கிணைப்பாளர் சிவ சதீஷ்குமார்,செந்தில் குமார்,தினகரன்,சுதா,இயேசு மணி,கல்லூரி நிர்வாகிகள் அருட்தந்தை S.சேவியர்,முதல்வர் ராபின்சன்,துணை முதல்வர் லோகேஷ்,ஒருங்கிணைப்பாளர் பிரபு ஆகியோர் இருந்தனர்.

Facebook
YouTube
Instagram
WhatsApp