செஞ்சி. 6
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி சட்டமன்றத் தொகுதியில், தமிழக வெற்றி கழக வேட்பாளர்
பி.எம்.சந்திரசேகரன் சனிக்கிழமையன்று தனது வேட்பு மனுவை காதல் செய்தார்.
செஞ்சி சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் கட்சி சார்பில் போட்டியிடம் பி.எம்.சந்திரசேகரன் தனது வேட்பாளர் மனுவை,
செஞ்சி சட்டமன்றத் தொகுதி தேர்தல் அலுவலர் தமிழரசனிடம் வேட்புமனை தாக்கல் செய்தார். உடன் செஞ்சி உதவி அலுவலர் கார்த்திகேயன் இருந்தார்.
அதன்படி தமிழக வெற்றிக்கழக தொண்டர்கள் விழுப்புரம் வடக்கு மேற்கு மாவட்ட செயலாளர் குண சரவணன் தலைமையில் ஊர்வலமாக வந்தனர். பின்னர் இவர்களை போலீசார் நான்கு முனை சந்திப்பில் நிறுத்தினர்,
ஐந்து பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே அவர்களை திருப்பி அனுப்பினர், வேட்பு மனு தாக்கல் செய்த பிறகு செஞ்சி திருவண்ணாமலை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் செஞ்சி தொகுதியை சேர்ந்த தமிழக வெற்றிக்கழக கட்சியினர் சுமார் 700 பேர் கலந்து கொண்டனர். நிர்வாகிகள், மாநில பொது குழு உறுப்பினர் ரேவதி சிவக்குமார், செஞ்சி நகர செயலாளர் நசுருதீன், ஒன்றிய செயலாளர் பாண்டியன், ரகுபதி, முருகன், திருமலை, ஸ்ரீநிதி உள்ளிட்ட தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

More Stories
புதுச்சேரி உழவர்கரை தொகுதி: குக்கர் சின்னத்திற்கு ஆதரவு திரட்டும் சுயேச்சை வேட்பாளர் சரவணன்!
ஹோட்டலில் தோசை ஊற்றி ஓட்டு சேகரிக்க பாஜக வேட்பாளர் கிருத்திகா
மொடக்குறிச்சி தொகுதி மதிமுக வேட்பாளருக்கு ஆதரவு..