திண்டுக்கல் மார்ச் 4
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள வேல்வார் கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட சாமிநாதபுரம் பகுதியில் பல ஆண்டுகளாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களுக்கு காவிரி குடிநீர் மட்டுமே வழங்கப்பட்டு வந்த நிலையில் தங்களுக்கு அடிப்படை ஆதாரமான கூடி நீர் வசதி மற்றும் போக்குவரத்து வசதி இன்மையால் தங்கள் குழந்தைகள் நீண்ட தூரம் பயணம் செய்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்வதாக தெரிவித்தனர் இவ்வளவு ஆண்டு காலமாக தங்களுக்கு தேவையான குடிநீர் மற்றும் பஸ் போக்குவரத்து வசதி இன்மையால் மிகவும் அவதிப்படுவதாகவும் வடமதுரை யூனியன் அலுவலகத்தின் முன்பு புகார் மனுடன் வந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது, பின்னர் அங்கு வந்த காணப்பாடி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும் திமுக ஒன்றிய செயலாளருமான பாண்டி, விரைந்து நடவடிக்கை எடுத்து வேண்டிய உதவிகளை செய்து தருமாறு கூடியதன் அடிப்படையில் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் கலைந்து சென்றனர்.

More Stories
வந்தவாசியில் 700 நாட்களை கடந்த பகிர்ந்துண் இலவச உணவகம்…!
சேலம்,06/04/2026.
Election