April 7, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள போச்சம்பள்ளி சந்தூர் கிராமத்தில் தெருநாய்கள் அட்டகாசம்:

பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் கடும் அச்சம்!

போச்சம்பள்ளி:
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி தாலுகாவிற்கு உட்பட்ட சந்தூர் கிராமத்தில் தெருநாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் கடும் அச்சத்துடன் வாழும் சூழல் நிலவுகிறது.
முக்கிய வீதிகளில் நாய் படை
சந்தூர் கிராமத்தின் முக்கிய வீதிகள் மற்றும் தெருக்களில் நாய்கள் கூட்டமாகச் சுற்றித் திரிகின்றன. சாலையில் நடந்து செல்லும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரையும் துரத்திச் சென்று கடிக்க முயல்வதால், மக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூட அஞ்சுகின்றனர்.
பாதிக்கப்படும் பள்ளி மாணவர்கள்
குறிப்பாக, காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளிக்குச் செல்லும் மாணவ-மாணவிகள் இந்த நாய் தொல்லையால் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். நாய்கள் திடீரென குரைத்துக்கொண்டு துரத்துவதால், பயத்தில் ஓடும் குழந்தைகள் கீழே விழுந்து காயமடையும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.
நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்:

“தெருக்களில் நாய்கள் பயங்கரமாக அச்சுறுத்துகின்றன. குழந்தைகளைத் தனியாக வெளியே அனுப்பவே பயமாக இருக்கிறது. இது குறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அசம்பாவிதங்கள் ஏதேனும் நடப்பதற்கு முன்பாக அதிகாரிகள் தலையிட வேண்டும்,” என கோரிக்கை விடுத்துள்ளனர்.

எனவே, சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் விரைந்து நடவடிக்கை எடுத்து, தெருநாய்களைக் கட்டுப்படுத்தவும், பொதுமக்களின் அச்சத்தைப் போக்கவும் முன்வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறிப்பு
கால்நடை மருத்துவர் ஹெல்த் இன்ஸ்பெக்டர் ஊராட்சி செயலாளர் கண்டு கொள்வதில்லை

பொதுமக்கள் நாய்களை வளர்க்கும் போது உரிமம் பெறாமலும் முறையாக தடுப்பூசி செலுத்தாமல் வளர்க்கின்றன கண்டுகொள்ளாத அதிகாரிகள்

பொதுமக்களை கடிக்கும் போது பல்வேறு உடல் பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர்.

மாவட்ட செய்தியாளர்
கவியரசு
9900557307

Facebook
YouTube
Instagram
WhatsApp