April 5, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

அனந்தபுரம் ரோட்டரி சமுதாய குழுமம் மற்றும் செக்கோவர் நிறுவனம் சார்பில் விருது வழங்கும் விழா

விழுப்புரம் மார்ச் 04:

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி செக்கோவர் தொண்டு நிறுவனம் அலுவலகத்தில்
அனந்தபுரம் ரோட்டரி சமுதாய குழுமம் மற்றும் செஞ்சி செய்பவர் தொண்டு நிறுவனம் சார்பில் சிறந்த ஆசிரியர்களுக்கான விருது வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் செய்து செக்கோவர் நிறுவன இயக்குனர் அம்பிகா சூசை ராஜ் தலைமை தாங்கினார்.
ஆனந்தபுரம் ரோட்டரி சமுதாய குழுமத்தின் முன்னாள் தலைவர்
ஜேசு ஜூலியஸ் ராஜா
முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக இ கே ஆர் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் ஆனந்த முருகன் கலந்து கொண்டு சிறந்த ஆசிரியர்களுக்கு விருது வழங்கி பாராட்டி சிறப்புரையாற்றினார்.
இதில் செஞ்சி தாலுக்கா விக்கிரவாண்டி தாலுக்கா பகுதிகளில் அரசு பள்ளிகளில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியை செக்கோவர் ஊழியர் சங்கீதா தொகுத்து வழங்கினார்.
நிகழ்ச்சியில்
சூர்யா ரவீந்திரன் ராஜாராம் அரவிந்தன் குலசேகர் அரசு ராஜசேகர் சிவானந்தம் பிரசன்னா மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Facebook
YouTube
Instagram
WhatsApp